'Gopu'win Pokishangal
()
About this ebook
திருச்சியில் இயங்கி வரும், பொதுத்துறையின் 'மஹாரத்னா' நிறுவனமாகிய B.H.E.L. (BHARAT HEAVY ELECTRICALS LIMITED) இல் நிதித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள V. Gopalakrishnan ஆகிய இவர், 'வை. கோபாலகிருஷ்ணன்'என்றும், 'கோபு' என்றும், 'VGK' என்றும் எழுத்துலகில் அறியப்பட்டுள்ளார்.
2005-இல் இவர் 'தாயுமானவள்' என்ற தலைப்பினில் எழுதிய முதல் சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் T.V.R. நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத்தேர்வாகி, தினமலர்-வாரமலரில் வெளியாகி, இவரை எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது.
அதன்பிறகு இதுவரை தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியுள்ளார். 2005 முதல் 2010 வரை இவரின் பல படைப்புகள் தமிழின், பல பிரபல வார / மாத இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன.
02.01.2011 முதல் தனக்கென்று ஓர் தனி வலைத்தளத்தினை [ gopu1949.blogspot.in ] ஏற்படுத்திக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 க்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.
இவரின் வலைத்தளப் பதிவுகளையும், அவைகளுக்கு பிற வாசகர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் இவர் பொறுமையாகக் கொடுத்துள்ள விரிவான பதில்களையும் பார்த்தாலே, இவரின் வாசகர் வட்டம் மிகப் பெரியது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.
2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, பெரும் பொருட்செலவில், இவர் தனியொரு மனிதனாக முயன்று, தன் வலைத்தளத்தினில், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு, மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள 'சிறுகதை விமர்சனப் போட்டிகள்' http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html வலையுலக எழுத்தாளர்களிடையே இன்றும் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசப்பட்டு வரும் மாபெரும் சரித்திர சாதனையாகும் என்பதில் ஐயமில்லை.
இது வரை இவர் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த மூன்று நூல்களுமே, வெவ்வேறு மிகச்சிறந்த இலக்கிய அமைப்புகளால், தேர்வு செய்யப்பட்டு, இவருக்குப் பொன்னாடை, பொற்கிழி, பரிசுகள், விருதுகள் என அளித்து கெளரவிக்கப் பட்டுள்ளன. http://gopu1949.blogspot.in/2011/07/4.html
மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருமான இவரின் தமிழ் ஆக்கங்களில் பலவும் கன்னடம், ஹிந்தி போன்ற வேற்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பிற மாநிலங்களிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்திகளாகும்.
சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், ஆன்மிகம், நாடகங்கள், நகைச்சுவை, பிறரின் நூல் அறிமுகங்கள், தந்திரக் கணக்குகள், கைவேலைத் திறமைகள், ஓவியம் என அனைத்திலும் கலக்கி வரும் இவர் இருமுறை தேசிய விருது பெற்றுள்ளதுடன், அகில இந்திய அளவிலும், உலகளவிலும் நடைபெற்றுள்ள சில போட்டிகளிலும் கலந்துகொண்டு நிறைய பரிசுகளும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் படைப்புகளில் பலவற்றை மின்னூல் வடிவில் கொண்டுவர இருப்பதில், நம் 'புஸ்தகா மின்னூல் நிறுவனம்' மிகவும் பெருமை கொள்கிறது.
Read more from V. Gopalakrishnan
‘Gopu’win Sirapana Kathaigal Collection 4 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win kuttiyondu Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 3 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Nadaka Aakkam Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Chinna Chinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 5 Rating: 0 out of 5 stars0 ratings'Gopu'win Palli Vazhkai Anupavangal Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 1 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to 'Gopu'win Pokishangal
Related ebooks
Prachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsThathu Arinthathum Ariyathathum Rating: 0 out of 5 stars0 ratingsNalamillai... Nalama? Rating: 0 out of 5 stars0 ratingsVaanga Thambi Thangaiyare Rating: 0 out of 5 stars0 ratingsYaar Indha Sundaravalli? Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Saaviyaal Manathai Thirakkirean Rating: 0 out of 5 stars0 ratingsMouna Vetri Rating: 0 out of 5 stars0 ratingsSeivinai Seyapattu Vinai Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Gnana Mozhigal – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsYaanaikku Uthaviya Erumbugal Rating: 0 out of 5 stars0 ratingsNee Nadhi Pola Odikondiru... Rating: 4 out of 5 stars4/5Kanavu Kaanungal Rating: 0 out of 5 stars0 ratingsThamizhthenee Short Story Collection - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNizhalai Thedupavan! Rating: 0 out of 5 stars0 ratingsAgavarigal Rating: 0 out of 5 stars0 ratingsEngal Veettu Maadiyile Rating: 0 out of 5 stars0 ratingsUnakkul Pudhayal Rating: 0 out of 5 stars0 ratingsUrchagam Ungal Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsChina Pona Pena! Rating: 0 out of 5 stars0 ratingsAnbudai Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsPuzhuthiyum Pattu Kuruviyum Rating: 0 out of 5 stars0 ratingsSollathathaiyum Sei Rating: 5 out of 5 stars5/5Panama? Pasama? Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Kamalam Solgiraal Rating: 0 out of 5 stars0 ratingsKaana Mudiyathathil Unarapadubavare Kadavul! Rating: 0 out of 5 stars0 ratingsMazhaiveli Thanile Rating: 0 out of 5 stars0 ratingsThanneriley Thaamarai Poo Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Petrorgale Kavaniyungal Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for 'Gopu'win Pokishangal
0 ratings0 reviews
Book preview
'Gopu'win Pokishangal - V. Gopalakrishnan
http://www.pustaka.co.in
கோபுவின் பொக்கிஷங்கள்
Gopuwin Pokishangal
Author:
வை. கோபாலகிருஷ்ணன்
V. Gopalakrishnan
For more books
http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. கலைமகள் கைகளுக்கே சென்று வந்த என் பேனா:
2. பிள்ளைகள் கொடுத்துள்ள ஒருசில அன்புத்தொல்லைகள்:
3. பொக்கிஷமான சில நினைவலைகள்
4. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
5. ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள்
6. அம்மா! உன் நினைவாக....
7. அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்:
8. என் மனத்தில் ஒன்றைப்பற்றி.....நான் நினைத்ததெல்லாம் வெற்றி!
9. "நானும் என் அம்பாளும்! [அதிசய நிகழ்வு]
10. பூஜைக்கு வந்த மலரே வா......
11. தெய்வம் இருப்பது எங்கே?
1. கலைமகள் கைகளுக்கே சென்று வந்த என் பேனா:
பொக்கிஷம்
என்பது பற்றி ஒருசில வார்த்தைகள் பேசிவிட்டு அதன் பிறகு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.
நாம் தினமும் எவ்வளவோ பொருட்களை உபயோகப்படுத்தி வருகிறோம். சில பொருட்கள் பரம்பரை பரம்பரையாக நம்மிடம் இருக்கக்கூடும். அதை அன்றாடம் நாம் உபயோகிக்கிறோமோ இல்லையோ அவைகளில் சில நம் வீட்டுப்பரணைகளில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
அவைகள் தேவையா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் இருப்போம். அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லாமல் இருக்கும். முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பினும் ஏதோ ஒரு சோம்பலிலோ, நேரமின்மையாலோ, டஸ்ட் அலர்ஜி போன்றவைகளாலோ அல்லது செண்டிமெண்ட் ஆகவோ அத்தகைய பொருட்களை வீட்டை விட்டு வெளியேற்ற நாம் தயங்குவோம்.
சில பொருட்கள் நமக்கு பொக்கிஷமாகவே இருப்பினும் அவற்றை நம்மால் பாதுகாப்பது என்பது முடியாமல் போகும்.
உதாரணமாக நமது அன்புக்குரியவர், ஓர்’ரவாலாடு' போன்ற தின்பண்டம் நமக்குத் தருகிறார். நம் அன்புக்கு உரியவரான அவர் நமக்குக் கொடுக்கும் அது, நம்மைப்பொறுத்தவரை ஒரு பொக்கிஷம் தான்.
அதற்காக அதை நாம் ருசி பார்க்காமல் நீண்ட நாட்கள், அந்த நம் அன்புக்குரியவரின் நினைவாகவே அதை வைத்திருந்தால் என்ன ஆகும்? அந்தப்பொருளே தெரியாதபடி எறும்புகள் சூழ்ந்து கொள்ளும்.
அதுபோலவே காதலர் காதலிக்குக்கொடுக்கும் ரோஜா மலர். ஓரிரு நாட்கள் வைத்துக்கொண்டு அழகு பார்க்கலாம். அதன் பின் அது வாடிவிடும். இவற்றையெல்லாம் பொக்கிஷமாக நாம் கருதினாலும் நீண்ட காலம் நம்மிடம் அவற்றை வைத்துக்கொண்டு பாதுகாக்க முடியாது.
அதுபோல ஒருவர் ஒருசில பொருட்களை மிகவும் பொக்கிஷமாக நினைக்கக்கூடும். அதே பொருட்கள் மற்றவர்களுக்கும் பொக்கிஷமாக நினைக்கத்தோன்ற வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது தவறு.
உதாரணமாக என் படைப்புகள் வெளியான பத்திரிகைகள், நான் வாங்கிய பரிசுகள், நான் எழுதிய நூல்கள், எனக்குத்தரப்பட்ட சான்றிதழ்கள், எனக்கு பிறரால் எழுதப்பட்ட பாராட்டுக்கடிதங்கள், நான் பெற்ற விருதுகள், பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், என்னைப்பற்றி செய்தித்தாளில் வந்த செய்திகள் முதலியவற்றை நான் எப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவது உண்டு. ஓரிரு பெரிய பெட்டிகள் நிறைய அவற்றை சேர்த்து வைப்பதும் உண்டு.
என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட..... ஒரே குப்பை தான். அடசல் தான்.
ஒவ்வொருவர் டேஸ்ட் [ருசி] ஒவ்வொருவிதமாக இருக்கும். எல்லாவற்றையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
என் டேஸ்ட் பற்றியும், என் மனைவியின் டேஸ்ட் பற்றியும் கூட என்னுடைய சுடிதார் வாங்கப்போறேன்
என்ற சிறுகதையின் முதல் பகுதியில் ஓரளவுக்கு விபரமாக எழுதியுள்ளேன். இதுவரை படிக்காதவர்கள் போய்ப்படிக்கவும்.
இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
நானும் என் மனைவியும் சற்றும் ஜாதகப் பொருத்தமில்லாதவர்கள். ஷஷ்டாஷ்டக ஜாதகக்காரர்கள். பொதுவாக இதுபோல ஷஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்.
இருப்பினும் இதில் இருந்த’மித்ர ஷஷ்டாஷ்டகம்' என்ற விதிவிலக்கை மட்டுமே, தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, என் மாமியாரும் என் தந்தையும் ரிஸ்க் எடுத்துள்ளனர்.
என் மாமியாருக்கு என் தந்தை சொந்த தாய் மாமா என்பதும் இவர்கள் எடுத்த ரிஸ்க்குக்கு சாதகமாக அமைந்து விட்டது.
விதியின் விளையாட்டை யாரால் தான் தடுக்க முடியும்? கடைசியில் இந்த விஷப்பரிட்சையில் மாட்டியவன் நான் அல்லவா!
எங்களுக்குள் எந்தப்பிரச்சனை, எந்த நேரத்தில், எந்த ரூபத்தில், எப்போது ஏற்படும், அது எவ்வளவு தூரம் பூதாகாரமாக வளரும், பின் எப்போது அந்தப்புயல் கரையைக்கடந்து